பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நடித்து வரும் படம் - 'புறம்போக்கு'. கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த புறம்போக்கு படத்தின் வேலைகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து, பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமானமுறையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் முதல்வாரத்தில் நடைபெற உள்ளது. அது முடிவுற்ற பிறகு, படத்தை தணிக்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் மாதமே படத்தை தணிக்கை அனுப்பினாலும் 'புறம்போக்கு' படத்தை தொழிலாளர்கள் தினமான மே-1 ஆம் தேதிதான் ரிலீஸ் செய்கின்றனர்.
இந்த செய்தியை புறம்போக்கு படத்தைத் தயாரிக்கும் 'யுடிவி' தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் 'மாஸ்' படமும் தொழிலாளர் தினமான மே-1 ஆம் தேதி தான் ரிலீசாகிறது.
பெரிய நட்சத்திரங்கள் நடித்த இரண்டு பெரிய படங்கள் மே-1 ஆம் தேதி ரிலீசாகவிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் விநியோகஸ்தர்களுக்கு கலக்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு படத்தினால் நிச்சயம் இன்னொரு படத்துக்கு பாதிப்பு இருக்கும் என்பதே காரணம். எனவே மாஸ் அல்லது புறம்போக்கு இரண்டில் ஏதாவது ஒரு படம் சில வாரம் தள்ளி ரிலீஸ் ஆவது நல்லது என்கிறார்கள்.