ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பஹத் பாசிலின் செயல் மலையாள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது பொய்யில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து படங்களின் அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுத்திருக்கிறார் இளம் முன்னணி ஹீரோ பஹத் பாசில்.. காரணம் கடந்த வருடத்தில் பஹத் பாசில் நடித்து வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பப்படம் ஆனதுதான்.. அதில் ஒரே ஒரு படம் மட்டும் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் அது 'பெங்களூர் டேய்ஸ்' மட்டும் தான். ஆனால் அதுகூட துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருக்கும் சேர்த்து கிடைத்த கூட்டணி வெற்றி தானே..?
இந்த வருடத்தில் இதுவரை அவர் நடித்து வெளியான 'மரியம் முக்கு', 'தரம்' ஆகிய இரண்டு படங்களும் அவர் முகத்தில் சிரிப்பை வரவழைக்கவில்லை என்பதே உண்மை. சமீபத்தில் தயாரிப்பாளர் அரோமா மணி, தனது படத்தில் இருந்து பஹத் பாசில் விலகிக்கொண்டதாகவும், வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி தரவில்லையென்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் விசாரித்தபோது பஹத் பாசில், தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் காமா சோமாவென்று நடிக்க விரும்பாமல், தனக்கு செட்டாகாத சிலவற்றை களையெடுக்கும் விதமாகத்தான் தயாரிப்பாளர் அரோமா மணியின் படம் உட்பட ஐந்து படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுத்துள்ளார். குறிப்பாக தனது முந்தைய தோல்விகளின் மீது அவநம்பிக்கை வைத்து, புறம் பேசி வருபவர்களின் படங்களைத்தான் ஓரங்கட்டி வருகிறாராம் பஹத் பாசில்..