ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆடியோ நிறுவனங்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், ஆடியோ நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலை தடையை நிரந்தர தடையாக மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அதில், என் இசை அமைப்பு, ஒலிப்பதிவு, பாடல்களுக்கு, முழு பதிப்புரிமையும் எனக்கு தான் உள்ளது. சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல், பக்தி பாடல்களையும், ஒலிப்பதிவு செய்துள்ளேன். ரிகார்டிங் நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட உரிமை, காலாவதியாகி விட்டது. அவற்றை புதுப்பிக்காமல், உரிமை கொண்டாட முடியாது. எனவே, என் பாடல்கள், ஒலிப்பதிவில், எனக்கு உள்ள உரிமையில் குறுக்கிட, அகி மியூசிக், எக்கோ மியூசிக் உள்ளிட்ட ரிகார்டிங் நிறுவனங்களுக்கு, தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மியூசிக் நிறுவனங்களுக்கு நிரந்தரமாகவே தடை விதித்து நீதிபதி சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.