ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து இயக்கும் படம் ''உள்குத்து''. திருடன் போலீஸ் டீம் அப்படியே இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஹீரோயின் மட்டும் மாற்றம். தெலுங்கில் அந்தக்குமுண்டு படத்தில் அறிமுகமாகி வளர்ந்து வரும் ஈஸா என்பவர் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். நான் கடவுள் ராஜேந்திரன், காமெடியன் பாலா, ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா, ஜஸ்டின் பிரபாகர் இசை என திருடன் போலீஸ் டீம் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
நாகர் கோவில் பகுதியில் நடக்கும் கதை. பெற்றோருடன் சந்தோஷமா இருக்கும் ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களுக்குள் என்ன மாற்றம் நடக்கிறது. அவர்களின் அன்பு எப்படி பரிணாமம் பெறுகிறது. அல்லது ஓரிடத்தில் குவிகிறது என்பதை யதார்த்தமாகவும், காமெடியாகவும் சொல்கிற படம். அடுத்த மாதம் நாகர்கோவில் பகுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக அந்த பகுதியில் முகாமிட்டு படப்பிடிப்புக்கான லொக்கேஷன்களை தேர்வு ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மாவுடன் தேர்வு செய்து வருகிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.