ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படத்திற்கு பிறகு தனது அடுத்தபட வேலைகளில் களம் இறங்கிவிட்டார். சமீபத்தில், அமீர்கான் நடிப்பில் இந்திய அளவில் பெரும் வசூல் சாதனை புரிந்த பி.கே. படத்தை, ஷங்கர், தமிழில் ரீ-மேக் செய்ய இருப்பதாகவும், இப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் 'ஐ' படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் விஜய்யும் பங்கேற்றதால், அடுத்தபடம் விஜய்-ஷங்கர் கூட்டணியாக இருக்கும் என உறுதியாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஷங்கர் அடுத்தப்படியாக தமிழ் படத்தை இயக்க போவதில்லையாம். மாறாக இந்தியில் ஒரு படத்தை இயக்க போகிறாராம். அதுவும் அமீர்கானை வைத்து படம் இயக்க உள்ளாராம். சுமார் 6 மாதத்திற்கு முன்பே ஷங்கர் கதையை ரெடி பண்ணிவிட்டாராம். தற்போது அந்த கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறாராம். விரைவில், ஷங்கர்-அமீர் இணையும் படத்திற்கான அறிவிப்பு வௌியாகும் என்று ஷங்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய்யை வைத்து அவர் பி.கே படத்தை ரீ-மேக் செய்யவில்லை என்றும் உறுதியாக கூறுகிறார்கள்.