ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. சில தினங்களுக்கு முன்னர் நயன்தாரா, டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்குவது போன்ற வீடியோ ஒன்று இணையதளங்களில் வௌியானது. நயன்தாரா, நிஜமாகவே சென்று பீர் வாங்கினாரா என்று பலரும் விவாதிக்க தொடங்கிய நிலையில், அவர் நடித்து வரும் ஒரு படத்தில் தான் இந்த காட்சி இடம்பெறுவதாக பின்னர் தெரியவந்தது. இந்தக்காட்சியை படமாக்கியபோது அதை யாரோ செல்போனில் திருட்டு தனமாக எடுத்து இணையதளத்தில் பரப்பிவிட்டனர்.
இதனிடையே நயன்தாரா படத்திற்காகத்தான் பீர் வாங்கினார் என்றாலும் அதை எதிர்த்து போராட்டம் நடத்த தயாராகிவிட்டனர் இந்து மக்கள் கட்சியினர். இதுகுறித்து அந்த கட்சியின் சென்னை மண்டல செயலாளர் வீரமாணிக்கம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. மேலும் தமிழகத்தில் மதுகுடித்து இறந்து போன ஆண்களின் எண்ணிக்கை 20 லட்சம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.
இந்தசூழலில் நடிகை நயன்தாரா, டாஸ்மாக்கிற்கு சென்று பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. மேலும் பெண்களை குடிக்க தூண்டுவது போல் இந்த காட்சி உள்ளது, எனவே இந்தக்காட்சியை சம்பந்தப்பட்ட படத்திலிருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் நயன்தாராவுக்கு எதிராகவும், அந்தப்படத்திற்கு எதிராகவும் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.