சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் 1970ம் ஆண்டு உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். ராஜேந்திர பிரசாத், ஜம்புலிங்கம், வி.சி.குகநாதன் ஆகியோரிடம் 10 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு 1980ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இயக்குனரானார். சமுகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், டாக்டர்கள் செய்யும் சமூகவிரோத செயல்களை அந்தக் காலத்திலேயே துணிச்சலாக காட்டியவர். அப்படிப்பட்ட அவரது படங்களான நான் சிகப்பு மனிதன், நீதிக்கு தண்டனை, சாட்சி, போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன. நிலவே மலரே போன்ற காதல் படங்கள். முத்தம் என்ற திகில் படம் என பல விதமான கதைகளை இயக்கினார். இதுவரை 68 படங்களை இயக்கிய எஸ்.ஏ.சிக்கு தற்போது இயக்கும் டூரிங் டாக்கீஸ் 69வது படம். இதுதான் தன் கடைசி படம் என்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்.
இதுபற்றி அவர் கூறியதாவது: 40 வருடத்துக்கு மேல் சினிமாவில் இருக்கிறேன். 68 படங்கள் இயக்கி விட்டேன். திரும்பி பார்த்தால் எதுவும் சாதித்ததாக தோன்றவில்லை. என்னை சினிமா நினைவு வைத்துக் கொள்கிற மாதிரி ஒரு படம் இயக்க நினைத்தேன். அதுதான் டூரிங் டாக்கீஸ். இதுதான் எனது கடைசி படம். இனி படம் இயக்க மாட்டேன்.