ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கிய பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு நடிப்பதற்கும் பல வாய்ப்புகள் கதவை தட்டியுள்ளன. தமிழில், திகார், மாஸ், சூதாடி ஆகிய படங்களை கைவசம் வைத்திருப்பவர், மலையாளம், கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இதில், பேரரசு இயக்கியுள்ள திகார் படத்தில் ஒரு தாதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் என்பவரை வைத்து மலையாளத்தில்தான் திகார் படத்தை ஆரம்பித்தார் பேரரசு. அதையடுத்து, மலையாள நடிகர் நடித்த படத்தை தமிழில் டப் செய்தால் பெரிய அளவில் எடுபடாது என்பதால், பார்த்திபனை உள்ளே இழுத்து, இரண்டு ஹீரோ கதையாக மாற்றியிருக்கிறார்.
அந்த வகையில், திகார் படத்தில் பார்த்திபன்-உன்னி முகுந்தன் இரண்டு பேருமே தாதாக்களாகத்தான் நடித்திருக்கிறார்களாம். அதிலும், பார்த்திபனின் நையாண்டிக்கு ஏற்ற வேடம் என்பதால், அவருக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் பேரரசு. ஆக, சூர்யாவுடன் மாஸ் படத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் பார்த்திபனுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் சூதாடியிலும் வெயிட் வேடம்தானாம்.
ஆக, திரையில் இனி தோன்ற மாட்டேன். திரைக்குப்பின்னால் இருந்து டைரக்டராக மட்டுமே செயல்படப்போகிறேன் என்று பார்த்திபன் சொன்னதில் இருந்து இப்போது அவருக்கு திரையில் தோன்றும் மெகா வாய்ப்புகளாக கிடைத்து வருகின்றன. அதனால் அடுத்த பட வேலைகளைகூட கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறார் பார்த்திபன்.