ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துள்ளுவதோ இளமை ஷெரீனை தமிழ் ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. முதல்படத்திலேயே நாயகன் தனுஷ் தன்னை கற்பழித்து விடுவது போன்று துணிச்சலாக நடித்தவர். இப்படியொரு இமேஜ் முதல் படத்திலேயே ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு சினிமாவில் பெரிதாக வளர முடியாது என்று சிலர் முட்டுக்கட்டைப்போட்டும் அந்த படத்தில் நடித்தார் ஷெரீன்.
அந்த படமும் வெற்றியாக அமைந்ததால், அதையடுத்து தமிழில் பேசப்படும் நடிகையாக சில ஆண்டுகள் திகழ்ந்தார். சிபிராஜ் அறிமுகமான ஸ்டுடன்ட் நம்பர்-1, பீமா, பூவா தலையா என நடித்தவர் பின்னர் படவாய்ப்பு இல்லாமல் கன்னடத்துக்கு சென்று விட்டார். இருப்பினும் அவ்வப்போது கோடம்பாக்தக்துக்க வந்து கல்லெறிந்து வந்த ஷெரீனுக்கு இப்போது திகில், நண்பேன்டா என்ற இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதில், திகில் படத்தில் ஒரு மிரட்டலான ரோலில் நடித்திருக்கிறாராம் ஷெரீன். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் நாயகன் அசோக் உள்பட அனைத்து டெக்னீசியன்களும் ஆஜராகியிருந்தனர். ஆனால், முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஷெரீன் மட்டும் ஆப்சென்டாகியிருந்தார்.