14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
வளர்ந்து வரும் நடிகை இனியா தற்போது ஹீரோயின் வாய்ப்பு இல்லாமல் வில்லியாக நடித்து வருகிறார். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். அந்த பாட்டு ஹிட்டாகவே அதேமாதிரி ஒரு பாட்டுக்கு ஆட வந்த பல வாய்ப்புகளை தவிர்த்து விட்டார்.
இதுபற்றி இனியா கூறியதாவது: இந்திப் படங்களில் ஹீரோயினாக நடிப்பவர் ஒரு பாட்டுக்கு ஆடவும் செய்வார். அங்கே அதனை சகஜமாக எடுத்துக் கொள்வார்கள். ஒரு பாட்டுக்கு ஆட அழைப்பது அங்கு அந்த நடிகைக்கு கொடுக்கப்படும் சிறப்பு அங்கீகாரம. ஆனால் இங்கு அப்படியில்லை. மார்க்கெட் இழந்த நடிகைகள்தான் ஒரு பாட்டுக்கு ஆடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் மட்டும்தான் ஆடியிருக்கிறேன். என்னோட பெஸ்ட் பிரண்ட் மற்றும் குரு பிருந்தா மாஸ்டர் கேட்டுக்கிட்டதாலும் இன்னொரு பிரண்ட் லட்சுமிமேனன் பாடினதாலும் அந்த பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டேன். அதற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. நல்ல சம்பளத்துடன் வந்தது. ஆனால் ஒப்புக் கொள்ளவில்லை. எந்தப் படத்திலும் நான் வில்லியாக நடிக்கவில்லை. நெகட்டிவ் கேரக்டர்களில்தான் நடிக்கிறேன். அதற்கும் விமர்சனம் வந்தால் அதையும் விட்டுவிட்டு ஹீரோயினாகத்தான் நடிப்பேன். என்கிறார் இனியா.