ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த ஒளி ஓவியர் பாலுமகேந்திரா கடந்த 2007ம் ஆண்டு சென்னை சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் சினிமா பட்டறை என்ற திரைப்பட பயிற்சி பள்ளியை ஆரம்பித்தார். இதில் திரைப்படம் தொடர்பான இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு பற்றி பயிற்சி கொடுக்கப்பட்டது. பாலுமகேந்திராவே நேரடியாக பயிற்சி கொடுத்தார். இந்த பட்டறையுடன் சினிமா எடுக்க பயன்படும் ஸ்டூடியோ ஒன்றையும் அமைக்க வேண்டும். அதில் படப்பிடிப்புகள் நடக்க வேண்டும் என்று பாலுமகேந்திரா கனவு கண்டார்.
அந்த கனவை இப்போது அவரது மாணவரும், உதவியாளருமான வெற்றி மாறன் நனவாக்கி இருக்கிறார். அவர் இயக்கி வரும் விசாரணை படத்திற்காக சினிமா பட்டறை ஸ்டூடியோவில் செட்டு போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, கிஷோர், முருகதாஸ் நடித்து வருகிறார்கள். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார், ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.