ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில வருடங்களாக பெரிய நட்சத்திரங்கள் நடித்த தமிழ்ப்படங்கள் அனைத்தும் கேரளாவில் தமிழ்ப்படங்களாகவே வெளியாகி வருகின்றன.
அப்படி வெளியாகும் தமிழ்ப்படங்கள் நேரடி மலையாளப்படத்தை விட அதிகமான வசூலையும் ஈட்டி வருகின்றன.
இந்நிலையில், நவம்பர் 14-ஆம் தேதி ரிலீசா உள்ள வசந்தபாலன் இயக்கியுள்ள காவியத்தலைவன் படமும் அதே நாளில் கேரளாவில் வெளியாகிறது.
வழக்கமாக கேரளாவில் தமிழ் படங்கள் நேரடியாகவே வெளியிடப்படும். ஆனால் காவியத்தலைவன் படத்தை பிரதி நாயகன் என்ற பெயரில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.
இப்படத்தை மலையாளத்தில் ஏன் மொழிமாற்றம் செய்கிறார்கள்?
காவியத்தலைவன் படத்தின் கதாநாயகன்களில் ஒருவரான பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகர். தவிர மற்றொரு நாயகனான சித்தார்த்தும் மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். மற்றும் காவியத்தலைவன் படத்தில் நடித்துள்ள நாசர், வேதிகா ஆகியோரும் மலையாளப் படங்களில் நடித்தவர்கள்.
எனவே காவியத்தலைவன் படத்தை மலையாளப் படமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க பிரதிநாயகன் என்ற பெயரில் டப் செய்கிறார்கள்.
மற்றொரு காரணம்... காவியத்தலைவன் படத்தின் கதை.
மேடை நாடக கலைஞர்களின் கதையைச் சொல்லும் இப்படத்தை கேரள ரசிகர்கள் தமிழில் பார்ப்பதை விட, மலையாள மொழியில் பார்க்கவே விரும்புவார்கள் என்று எண்ணியே டப் செய்கிறார்களாம்.
பிருத்திவிராஜ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான செல்லுலாய்ட் படத்தை போலவே காவியத்தலைவன் படமும் ஒரு பீரியட் படமாக அமைந்திருப்பதும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டதற்கு காரணமாக சொல்கிறார்கள்.