ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒருவழியாக தீபாவளி அக்கப்போர் முடிந்து விட்டது. அடுத்து பொங்கல் பரபரப்பு ஆரம்பித்து விட்டது. தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட ஐ பொங்கலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியாகும் என்று கூறிவந்த லிங்கா படமும் தற்போது பொங்கலுக்கு கட்டாயம் வெளியாகயிருப்பதாக உறுதிபடுத்தியுள்ளனர்.
இதற்கிடையே விஸ்வரூபம் படத்தையடுத்து கமல் நடித்த விஸ்வரூபம்-2 பற்றிய எந்த தகவலும் இல்லாதபோது, உத்தமவில்லன் பொங்கலுக்கு வருவதற்கு தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் சித்தார்த்-ப்ருத்விராஜ் நடித்துள்ள காவியத்தலைவன் படத்தையும் பொங்கல் திருநாளில் திரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
லிங்கா, ஐ, உத்தமவில்லன் என்ற மூன்று பெருந்தலைகளின் படம் வரும் நேரத்தில் சித்தார்த்தெல்லாம் தாக்குப்பிடிப்பாரா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கும் நிலையில், நல்ல கதையில் உருவாகியிருக்கும் காவியத்தலைவனை ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் யார் வந்தாலும் கவலையில்லை. நாங்கள் பொங்கலுக்கு வருவது எப்போதோ உறுதி செய்தாகி விட்டது என்று தில்லாக பதில் கொடுக்கிறது காவியத்தலைவன் யூனிட்.
ஆனால், இப்போதைக்கு தில்லாக பேசினாலும், பொங்கல் திருநாள் நெருங்கும் நேரத்தில் களத்தில் நிற்பார்களா? இல்லை இடறி ஓடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.