ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர்சல்மான், ''தமிழில் வாயை மூடி பேசவும்'' என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் தோல்வியடைந்து விட்டபோதும இப்போது மணிரத்னம் இயக்கி வரும் ஓகே கண்மணி(அதிகாரப்பூர்வ தலைப்பு அல்ல) படத்தில் நடிக்கிறார். அதையடுத்து, இன்னொரு மலையாள நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் அடுத்து இயக்கும் ஒரு பக்க கதை என்ற படத்தில் அறிமுகமாகிறார்.
இப்படி இளவட்ட மலையாள நடிகர்களெல்லாம் தமிழ்ப்படங்களில் நடிப்பதால், மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசிலுக்கும் இப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அதனால் அவரது மனைவியான நஸ்ரியா தனக்கு தெரிந்த சில தமிழ் டைரக்டர்களை சந்தித்து கணவருக்காக படவேட்டையும் தொடர்ந்திருக்கிறாராம்.
அதோடு, படத்தில் பஹத் ஹீரோவாகத்தான் நடிப்பார் என்ற எந்த சட்டமும் இல்லை. இரண்டு மூன்று ஹீரோ கதைகள் என்றாலும் நடிப்பார். ஆனால் விஜய் சேதுபதி நடித்து வருவது போன்று கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் நிற்கிற மாதிரி வேடமாக கொடுங்கள் என்று தனது நிலையை விளக்குகிறாராம் நஸ்ரியா. அதனால் மோகன்லால், மம்மூட்டி, ப்ருதிவிராஜ், துல்கர்சல்மான, காளிதாசைத் தொடர்ந்து பஹத்பாசிலும் விரைவில் தமிழ் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.