ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த முதல் படமே தமிழில் மெகா ஹிட்டாக அமைந்ததால் கோலிவுட்டின் கவனத்துக்கு வந்தார். அதோடு, அப்போது சில நடிகைகள் சம்பள விசயத்தில் எகிறி நின்றதால், வளர்ந்து வரும் நடிகை குறைவான சம்பளம்தான் கேட்பார் என்று பல கம்பெனிகள் ஸ்ரீதிவ்யாவை போட்டா போட்டியில் புக் பண்ணின.
அதனால் ஜீவா, பென்சில், ஈட்டி என பல படங்களில் கமிட்டானார். தற்போது வெள்ளைக்கார துரை என்ற படத்தில் புதிதாக கமிட்டாகியிருக்கும் ஸ்ரீதிவ்யா கோலிவுட்டில் லட்சுமிமேனனின் இடத்தை கைப்பற்றி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில், ஒரே நேரத்தில் பல கம்பெனிகளுக்கு அவர் டேட்ஸ் கொடுத்து கால்சீட் சொதப்பல் செய்து வருவதாக ஸ்ரீதிவ்யா பற்றி செய்தி பரவியிருக்கிறது. ஆனால் இந்த செய்தியை அவசரகதியில் மறுத்திருக்கிறார் அவர். நான் ஒரே நேரத்தில் பல படங்களுக்கு கால்சீட் கொடுப்பதில்லை. சில சமயங்களில் நான் கால்சீட் கொடுத்த நாளில் கம்பெனிகள் படப்பிடிப்பு நடத்துவதில்லை. மாறாக, வேறு நாளில் படப்பிடிப்பு வைத்து எனனிடம் கால்சீட் கேட்கிறார்கள்.
ஆனால், அவர்கள் கேட்கிற தேதியில் நான் வேறு படத்திற்கு எற்னவே கால்சீட் கொடுத்திருப்பதால் நடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுதான் உண்மை. அந்த மாதிரி கம்பெனிகள்தான் நான் கால்சீட் குளறுபடி செய்வதாக சொல்கிறார்கள். அவர்கள் மீது தவறை வைத்துக்கொண்டு தேவையில்லாமல் என் பெயரை டேமேஜ் செய்கிறார்கள் என்று தன் பக்கமுள்ள நியாயத்தை எடுத்து வைக்கிறார் ஸ்ரீதிவ்யா.