ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் நடந்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக ஜி.சிவா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய தேர்தலில் மும்பையை சேர்ந்த அதீஷ் ரகோ என்பவரும், சிவாவும் போட்டியிட்டனர். சிவாவுக்கு 6 அமைப்புகள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து அதீஷ் விலகிக்கொள்ள சிவா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய தலைவராக தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதையொட்டி சிவாவுக்கு பெப்சி அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சிவா கூறியதாவது: இந்த வெற்றி எனது தனிப்பட்ட வெற்றியல்ல. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களின் வெற்றி. எனது பதவி காலத்தில் நமது தொழிலாளர்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வேன். திரைப்படத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தலைநகர் புதுடில்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்த இருக்கிறேன். என்றார்.