ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிஜிட்டல் சினிமா வந்த பிறகு சினிமா எடுப்பது மிகவும் எளிமையாகிவிட்டது. எதையாவது புதுமையாக செய்து மக்களை கவர வேண்டும் என்று நினைக்கிறார்கள். புதுகை மாரிசா என்பவர் 12 மணி நேரத்தில் ஒரு படத்தை எடுத்து சாதனை படைக்க நினைக்கிறார். படத்தின் பெயர் நடுஇரவு. புதுமுகங்கள் நடிக்கிறார்கள், உலக நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ரமேஷ் கிருஷ்ணா இசை அமைக்கிறார். இந்த படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் தொடங்கி வைத்தார்.
தனது புதிய முயற்சி பற்றி இயக்குனர் புதுகை மாரிசா கூறியதாவது: பல வருடங்காக திட்டமிட்டு இந்த முயற்சியை செய்கிறேன். வருகிற 19ந் தேதி இந்த படப்பிடிப்பு நடக்கிறது. மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் பக்காவாக இருக்கிறது. மோனிகா என்ற சிறுமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நடிப்பவர்கள் அனைவருக்குமே ஒத்திகையும், பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு திகில் கதை என்பதால் இரவிலேயே படத்தை எடுத்து முடித்து விடுகிறோம். என்றார்.