சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கணீர்க் குரலுக்கு சொந்தக்காரரான கே.ஜே.யேசுதாஸ் அனிருத் இசையமைத்து வரும் 'கத்தி' படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்னும் சில நாட்களில் அதாவது 18ம் தேதி நடை பெற உள்ளது. இன்றைய இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் இசையமைப்பாளராக அனிருத் இருந்தாலும் அவரும் பழம் பெரும் கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவதில்லை.
'வேலையில்லா பட்டதாரி' படத்தில் பழம் பெரும் பாடகியான எஸ்.ஜானகியை பாட வைத்தார். தற்போது கே.ஜே.யேசுதாசைப் பாட வைத்திருக்கிறார். இளமையும், பழமையும், பெருமையும் இணைந்தபடியான பாடல்களை இன்றைய ரசிகர்களும் வெகுவாக ரசிக்கிறார்கள். காலம் மாற மாற பழைய பாடல்களை ரசிப்பவர்களும், பழைய பாடகர், பாடகிகளையும் ரசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்று சொல்வார்கள். ஆனால், தற்போதைய தலைமுறையைப் பொறுத்தவரையில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் அன்றைய காலகட்டத் திரையிசைப் பாடல்கள் அடிக்கடி பார்க்கப்படும் வாய்ப்புகள் கிடைப்பதால் அவர்கள் அந்தத் தரமான இசையை இன்றும் கேட்டு வருகிறார்கள்.
பழமையில் புதுமை, புதுமையில் பழமை என்பதெல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் நன்றாகவே 'வொர்க் அவுட்' ஆகி வருகின்றன. அந்த விதத்தில் 'கத்தி' இசையில் யேசுதாஸ் பாடியிருக்கும் பாடலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.