ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆஸ்கர் விருதுகளை வென்ற பின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச இசையமைப்பாளராகவிட்டார். தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். சமீபத்தில்தான் “மில்லியன் டாலர் ஆர்ம், தி ஹன்ட்ரன் ஃபூட் ஜர்னி” ஆகிய படங்களுக்கு இசையமைத்து முடித்துள்ளாராம். அதோடு ஒரு சில ஹிந்திப் படங்களுக்கும், தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பார்க்கும் வேலை தனக்கு போரடித்து விடக் கூடாது என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியிருக்கிறார்.
“இப்போது நான் செய்து கொண்டிருக்கும் வேலையில் எனக்கு போரடித்து விடக் கூடாது என்பதுதான் எனக்கு முக்கியம். அதனால்தான் சில சரித்திரப் படங்களுக்கு இசையமைத்த பிறகு சில இளமையான படங்களுக்கும் இசையமைத்தேன். சரித்திரப் படங்களுக்கு இசையமைப்பதும் இன்பமான வேலைதான். அவை மிகவும் அனுபவத்தைத் தரக் கூடியவை. அவற்றிற்கு இசையைமக்கும் போது அந்தக் கலாச்சாரத்தைக் காண முடிகிறது.
இப்போதெல்லாம் என்னை கடினமாக மோடிவேட் செய்யக் கூடிய படங்களுக்கு மட்டுமே இசையமைக்க சம்மதிக்கிறேன். அது மிகவும் கடினமாக உள்ளது. அப்படி இல்லையென்றால் நம்முடைய ரசிகர்களை நாம் இழந்து விடுவோம். இங்கு இருப்பதை விட வெளிநாட்டில் இருக்கும் போதுதான் நான் சாதாரண மனிதனாக இருக்க முடிகிறது. சாலைகளில் என்னைச் சுற்றி யாரும் இருக்க மாட்டார்கள். என்னை அவர்கள் கண்டு கொண்டாலும் தனியாக இருக்க விடுவார்கள். எந்த தொந்தரவும் இல்லாமல் சாலைகளில் நீண்ட தூரம் நடந்தே பயணம் செய்வேன். இவற்றையெல்லாம் இங்கு செய்ய முடியாமல் போகிறது,” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.