ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவரது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடினார். அவர் குடும்பத்துடன் நேபாளத்திற்கு சென்றிருப்பதால் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தேஜா ரசிகர்களுடன் ஐதராபாத்தில் சிரஞ்சீவியின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினார். நேற்று சிரஞ்சீவியின் 150 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு நேற்று வெளியாகவில்லை.
ரசிகர்களிடம் ராம் சரண் பேசிய போது, “எல்லோருமே அப்பாவின் 150வது படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது, எண்ணற்ற கதைகளைக் கேட்டு வருகிறோம். இந்த 150வது படம் சாதனைகளுக்காக எடுக்கப்படும் படமல்ல, வழக்கமான கமர்ஷியல் படமாகவே இருக்கும். இந்த படத்தை சிரஞ்சீவி எவ்வளவு அழகா செஞ்சிருக்காருன்னு எல்லாரும் பேசணும், அதுதான் எங்களோட விருப்பம்,” என்றார்.
இதனிடையே சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க நடிகர்கள் மோகன்பாபு, ராஜசேகர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களிருவருமே சில காலம் வரை சிரஞ்சீவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள்தான். ஆனால், சிரஞ்சீவியை 150 வது படம் செய்யுங்கள், எனக்குப் பொருத்தமான கதாபாத்திரம் இருந்தால் நானும் நடிக்கிறேன் என மோகன்பாபுவே சொல்லியிருந்தார். அதே போல், ராஜசேகர், சிரஞ்சீவி படத்தில் நான் வில்லனாகவும் நடிக்கத் தயார் என்று அறிவித்துள்ளார். சிரஞ்சீவியால் அரசியலில் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் அவருடைய கனிவான குணம் அவருக்கு எதிராக இருந்த நட்சத்திரங்களையும் அவர் பக்கம் திரும்ப வைத்துள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.