சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சரத்குமார் நடிக்கும் சண்டமாருதம் படத்தை இயக்குவதில் தீவிரமாக இருக்கிறார் ஏ.வெங்கடேஷ். இதற்கு முன்பு அவர் இயக்கிய ரொம்ப நல்லவன்டா நீ என்ற காமெடி படத்தை வெளியிட தற்போது தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள், இதில் மிர்சி செந்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கேரளாவைத் சேர்ந்த ஸ்ருதிபாலா நாயகியாக நடித்துள்ளார், ஜான் விஜய். ரோபோ சங்கர். சர்வஷித் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குனர் வெங்கடேஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தைப் பற்றி இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது : பொதுவாக நான் இயக்கும் படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும். இது நான் இயக்கிய முழுநீள காமெடி படம், படத்தின் நாயகன் ஒரு அப்பாவி, ஆனால் புத்திசாலி. தனக்கு வரும் பிரச்சினைகளை அப்பாவியாக இருந்து கொண்டே அவர் சமாளிக்க மற்றவர்கள் அடப்பாவி என்று வாய் பிளப்பார்கள் அப்படி ஒரு கதை. இந்த கதைக்கு 80 களில் இருந்து பாக்யராஜ; சார் மாதிரி ஆள் தேவைப்பட்டார். அதற்கு பொருத்தமானவராக செந்தில் இருந்ததால் அவரையே நடிக்க வைத்தோம். இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற காமெடி படம். என்கிறார் வெங்கடேஷ். இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.