ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷின் படங்கள் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், அவரது வேலையில்லா பட்டதாரி படத்தை யாருமே ஒரு பொருட்டாகவோ, போட்டியாகவே நினைக்கவில்லை. அதனால்தான் அந்த படம் ரிலீசாகி ஒரே வாரத்தில் சித்தார்த்தின் ஜிகர்தண்டாவை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், வேலையில்லா பட்டதாரி ஹிட்டடித்து விட்டது. கூடவே சதுரங்க வேட்டையும் சேர்ந்து கொண்டது. அதனால், ஜூலை 25-ந்தேதி வெளியாக வேண்டிய ஜிகர்தண்டா ஆகஸ்ட்1-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 15-ந்தேதி சூர்யாவின் அஞ்சான் வெளியாகிறது. ஆக, அடுத்த மாதம் வெளியாக வேண்டிய சில படங்கள் தாமதமாகி வருகின்றன.
குறிப்பாக, ஆகஸ்ட் 1-ந்தேதி தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த பார்த்திபன், இப்போது ஆகஸ்ட் 1ல் ஜிகர்தண்டா வருவதால், மாற்று தேதியை தேடினார். ஆனால் ஆகஸ்ட் 15-ந்தேதி அஞ்சான் வருவதால். பிரபல நடிகர்களின் படங்களுடன் புதுமுகங்கள நடித்துள்ள தனது படத்தை வெளியிட்டால் வெற்றி பாதிக்கும் என்று ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 29க்கு மாற்றி விட்டார் பார்த்திபன். மேலும், அஞ்சான் 2 வாரம் ஹவுஸ்புல்லாக ஓடும் என்று எதிர்பார்க்கிற இந்த நிலையில், வெற்றி தோல்வியில் மாற்றங்கள் ஏற்பட்டால் இந்த முடிவிலும் மாற்றம் வரலாம் என்று தெரிகிறது.