ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது மெட்ராஸ் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக கொம்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கார்த்தி, திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமாக உள்ளார்.
இந்நிலையில், அஞ்சான் தொடர்பான விளையாட்டு ஒன்று இன்று(ஜூலை 29ம் தேதி) அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பங்கேற்ற சூர்யாவிடம், கார்த்தியின் உடல்நிலை குறித்து கேட்டபோது, கார்த்தியின் உடம்பில் நீர்சத்து குறைந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். உடல்நிலை தேறியவுடன் வழக்கம் போல் அவரது பாணியில் நர்ஸ்கள், டாக்டர்கள் என்று எல்லோரையும் கலாய்த்து கொண்டு இருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர் தங்கியிருந்த அறை எண் 420, அதனால் தான் தன்னை இந்த அறையில் அனுமதித்து உள்ளனர் என்று நக்கல் செய்து கொண்டு இருந்தார்.
இவ்வாறு சூர்யா கூறினார்.