பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |
ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு கட்டாயம் பொருந்தும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த காலத்தால் அழிக்க முடியாத காவியம் ஆயிரத்தில் ஒருவன். படத் தயாரிப்பில் நஷ்டமடைந்து பொருளாதார சிக்கலில் இருந்த பி.ஆர்.பந்தலுவுக்கு உதவுவதற்காக எம்.ஜி.ஆர் தானே முன்வந்து நடித்துக் கொடுத்த படம். இன்றைக்கு பலரது கடனை அடைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கு பி.ஆர்.பந்தலு சிவாஜியை வைத்து தொடர்ந்து படம் எடுத்தவர்.
திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆயிரத்தில் ஒருவனை டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்பாக மாற்றி புதிய தரமான ஒலிப்பதிவை சேர்த்து மீண்டும் வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 தியேட்டர்களில் ரிலீசானது. இன்றைய பெரிய ஹீரோக்கள் படமே 25 நாட்களை தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது. மக்கள் திலகத்தின் படம் ஆல்பட் தியேட்டரில் 50 நாள் ஓடி சாதனை படைத்து விட்டது.
ஆயிரத்தில் ஒருவன் ஆஃப் செஞ்சுரி அடித்ததை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடிவிட்டார்கள். எம்.ஜி.ஆர் கட்வுட், பாலாபிஷேகம், வாழ்த்து போஸ்டர்கள் என ஆல்பர்ட் வளாகத்தை ஆட்டிபடைத்து விட்டார்கள். நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகைகள் ராஜஸ்ரீ, சி.ஐ.டி சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 50வது நாள் அன்று படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர்.