ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
1100 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் ராஜ ராஜ சோழனின் போர்வாளை மையமாகக் கொண்டு உருவாகும் படம்தான் ராஜராஜ சோழனின் போர்வாள். இப்படத்தில் பாடலாசிரியர் சினேகன் நாயகனாக நடிக்கிறார். சரித்திர கால காட்சிகள் அப்படத்தில் ஒரு 25 நிமிடம்தான் வருகிறது என்றாலும். அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்களாம்.
அதிலும், போர்வாள்தான் படத்தின் மையம் என்பதால், அதுபற்றி ரொம்ப விவரமாக சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த வாள் பற்றிய தகவல்களை தஞ்சை பகுதியில் விசாரித்தபோது யாருக்குமே தெரியவில்லையாம். கடைசியாக, கல்வெட்டுகளில் அந்த வாள் பற்றிய செய்தியை கண்டு பிடித்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஊருக்கு சென்று தகவலை சேகரித்தார்களாம்.
இதுபற்றி சினேகன் கூறுகையில், ராஜராஜ சோழன் தனது காலத்தில், போர் வாள்களை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள உடையாளூர் என்ற ஊரில் உள்ள பட்டறைகளில்தான் செய்து வந்திருக்கிறார்கள். 14 கிலோ எடையுள்ள அந்த வாள்களின் உயரம் 4.5 அடியாம். அத்தனை பெரிய வாளை தூக்கி அந்த காலத்து வீரர்கள் சண்டை செய்திருக்கிறார்கள். அதனால் போர் வாள் பற்றி சொல்லும்போது அது செய்யப்பட்ட அந்தந்த பகுதிகளிலேயே படமாக்கப்போவதாக சொல்லும் சினேகன், இந்த காலத்து மக்களுக்கு இது அரிய தகவலாக இருக்கும் என்கிறார்.