ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடித்த ப்ரியமுடன் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் விஜய் மில்டன். அதையடுத்து, நெஞ்சினிலே, பூப்பறிக்க வருகிறோம் என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், பரத் நடிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்றொரு படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
அதனால் தொடர்ந்து ஒளிப்பதிவிலேயே கவனம் செலுத்தி வந்தவர், 8 வருடங்கள் கழித்து கோலிசோடா என்ற படத்தை இயக்கினார். அப்படம் சூப்பர் ஹிட்டாகியது. அதனால் இப்போது பல முன்னணி ஹீரோக்களுக்கே அவரது இயக்கத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால் சில நடிகர்கள் அவரிடம் கதை கேட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐ படத்தையடுத்து விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இருப்பினும் அது உறுதிசெய்யப்படாத செய்திகளாக உள்ளன. இதற்கிடையே இந்தியில் வெளியான ஸ்பெசல் 26 என்ற படத்தின் ரீமேக்கில் விக்ரம் நடிப்பதாகவும் இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.
அதனால் இதை உறுதி செய்யும் வகையில், விஜய்மில்டனை தொடர்பு கொண்டு கேட்டபோது, விக்ரம் சாரிடம் நான் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்டது. அதனால் நடிப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டார். தற்போது படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் அனைத்தையும் முடித்து விட்டு படப்பிடிப்புக்கு செல்ல தயார் நிலையில் இருக்கிறேன். வருகிற ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இருப்பினும், ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம்தான் அப்படத்தை தயாரிக்கிறது. ஆனால், அந்நிறுவனத்துக்கும், விக்ரமிற்கும் இடையிலான இறுதிகட்ட பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தத்தில் இன்னும் சைன் ஆகவில்லை. அது விரைவில் முடிவாகி, நல்ல பதில் வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதையடுத்து படத்தில் பங்குபெறும் மற்ற கலைஞர்கள் பற்றிய செய்திகள் முறையாக அறிவிக்கப்படும் என்கிறார்.