ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ஆர்சி - 15 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், ரகுமான் என பலர் நடிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பை நடத்த தயாராகி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.
அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகிவரும் இந்த படம் ரூ. 170 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ரூபாய் 200 கோடிக்கு ஜீ நெட்வொர்க் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், ஷங்கர் ராம் சரண் இணைந்துள்ள இந்தப் படத்தை 2023ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டிருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி என்றால் அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருகிறது.