ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை லிசியும், இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்க்ள. இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். 14 வருட மணவாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சொத்துக்களை பிரித்துக் கொண்டதோடு விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் லிஸியும், பிரியதர்ஷனும் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற மலையாள மீடியாக்கள் சில செய்தி வெளியிட்டன. இதனை கடுமையாக மறுத்து லிஸி கூறியிருப்பதாவது:
நானும், பிரியதர்ஷனும் இணையப் போவதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் நோக்கம் எனக்குத் தெரியும். நாங்கள் மீண்டும் இணைவது என்பது ஒருபோதும் நடக்காது. காரணம் நாங்கள் பிரிந்ததற்கான காரணம் அப்படியே இருக்கிறது. அது எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், நீதிமன்றத்திற்கும் மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
நான் அனுபவித்த வேதனைகளை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இதுவரை சொன்னதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. அது எங்களோடு இருந்துவிட்டு போகட்டும். இன்னும் 3 மாதத்தில் விவாகரத்து கிடைத்து விடும். அதுவரை என்னை நிம்மதியாக வாழ விடுங்கள். கணவனை பிரிந்து தனிமையில் வாழும் ஒரு பெண்ணை பற்றி தேவையில்லாமல் எழுதலாமா?. இவ்வாறு லிஸி கூறியுள்ளார்.