ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்தவகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் சன்னி லியோனை ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள். தற்போது மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே போய் சன்னி லியோனின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அவரை கதாநாயகியாக்கி அழகு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே ரங்கீலா என்கிற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வந்த சன்னி லியோன் அது பாதியில் நிற்கும் நிலையில், தற்போது ஷீரோ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் சில சண்டைக் காட்சிகளிலும் நடிக்க வேண்டி இருந்தது. சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யும்போதே இயக்குனரை தனியாக அழைத்த அவரது மேனேஜர், சண்டைக்காட்சிகளில் சன்னி லியோன் நடிக்க ஆர்வம் காட்டுவார், ஆனால் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.. நீங்கள் அதற்காக டூப் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். ஆனால் இதை தெரிந்து கொண்ட சன்னி லியோன், தானே ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறியதோடு அதற்காக முன்கூட்டியே கேரளா வந்து ஒரு வாரம் ரிகர்சல் செய்து பயிற்சி எடுத்துக் கொண்டாராம். அதுமட்டுமல்ல சண்டைக் காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்தும் அசத்தினாராம்