மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாளத்தின் பிரபல நடிகை லீனா மரியா பால். இவர், மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்திலும் நடித்தவர். இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டு. சென்னையில் ஒரு வங்கியில் 18 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, போலீசாரிடம் சிக்கியவர்.
இவர் கொச்சியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அந்த பியூட்டி பார்லர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பார்லரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சமயத்தில், மரியா பால், அங்கு இல்லை. பார்லரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் மட்டும்தான் இருந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, 'மும்பையைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி புஜாரா, எனக்கு போன் செய்து 25 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டினான். நான், இது குறித்து ஏற்கனவே போலீசில் புகார் செய்திருக்கிறேன். பணம் கொடுக்காமல், புகார் கொடுத்த ஆத்திரத்தில், புஜாராவின் ஆட்கள்தான், என்னை மிரட்ட துப்பாக்கி சூடு நடத்தி இருக்க வேண்டும்' என மரியா பால் கூறியிருக்கிறார்.
அதை வைத்து, அந்த கோணத்திலேயே கொச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், லீனா மரியா பாலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.