ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மீடூ பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் முதலில் பாலிவுட்டில் தான் பூதாகரகமாக வெடித்தது. அதையடுத்து தற்போது கோலிவுட்டில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ் சினிமா உலகில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரையில் உள்ள பெண்களை பாதுகாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நடிகை டாப்சியுடன் ரேணுகா சகானே, அமோல் குப்தா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதையடுத்து டாப்சி விடுத்துள்ள செய்தியில், இந்த சினிமா தொழில் நமக்கு ரொட்டியும், வெண்ணெய்யும் தருகிறது. இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அதனால் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இடத்தை சுத்தப்படுத்துவோம். இந்த குழுவின் மூலம் நடிகைகளுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் ரீதியான சிக்கல்களில் இருந்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.