ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியா முழுவதும் 'மீ டூ' விவகாரம் பெரும் அளவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. திரையுலகத்தில் தான் பலரும் அவர்களது பாலியல் தொந்தரவுகளைப் பற்றி அதிகமாகப் பேசி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல நடிகைகள் அவர்களுக்கு நடந்த விஷயங்களைப் பற்றி பரபரப்பாகப் பேசி வருகிறார்கள்.
இந்த மீ டூ விவகாரம் குறித்து பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்கள் வாயைத் திறக்காமல் அமைதி காப்பது ஏன் என நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஷபனா ஆஸ்மி, கரன் ஜோஹர் போன்றவர்கள் எங்கே போனார்கள். அவர்களும் இது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். 'ஜிம் தோற்றம், ஏர்போர்ட் தோற்றம்' என பத்து முறை டுவீட் போடுவார் கரண். ஆனால், இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இது அவர்களுக்கு 'பிரட் அன்ட் பட்டர்' மாதிரி. திரையுலகம் ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்கி நகரும் போது அவர்கள் எங்கே?. பெரிய நட்சத்திரங்கள் ஏன் அவர்களின் விவரங்களை இதுவரை ஷேர் செய்யவில்லை. நான் மட்டுமே அது பற்றி பேசியிருக்கிறேன். ஆனால் அது மட்டும் போதாது,” என்று கங்கனா கூறுகிறார்.