ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலக நாடுகளை நடுங்க வைத்த மீ டூ இயக்கம் இப்போது இந்தியாவிலும் பரபரப்பு கிளப்பி வருகிறது. மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், நடிகர் நானே படேகர், பாடலாசிரியர் வைரமுத்து என முன்னணி பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை கேட் சர்மா பிரபல பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கேட் சர்மா டுவிட்டரில் குற்றச்சாட்டை கூறிவிட்டு ஒதுங்கி விடாமல் மும்பை வெரிசோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் 6ந் தேதி பட வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர் சுபாஷ் கய் என்னை அவர் வீட்டுக்கு அழைத்தார். அவர் மீது உள்ள மதிப்பு, நம்பிக்கையின் அடிப்படையில் அவர் வீட்டுக்கு சென்றேன்.
வீட்டின் தனி அறைக்குள் அழைத்துச் சென்று என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். எனக்கு ஒத்துழைக்காவிட்டால் எந்த படத்திலும் நடிக்கவிட மாட்டேன் என்று மிரட்டினார். நான் அவரிடமிருந்து தப்பி வந்து விட்டேன். அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டை சுபாஷ் கய் மறுத்துள்ளார்.