ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜனநாயகத்தின்படி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் நரேந்திர மோடி எனவும், அடுத்த தேர்தலிலும் அவரே பிரதமராக வேண்டும் எனவும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் சிறுவயது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சலோ ஜேட்டீ ஹெய்ன் என்ற குறும்படம் மும்பையில் நேற்று திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரணாவத்திடம், மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கங்கனா, பிரதமராக இருப்பதற்கு, நரேந்திர மோடி மிகவும் தகுதிவாய்ந்தவர் . ஜனநாயகத்தின் சரியான தலைவர் என்ற அடிப்படையில், மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார்.