ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிரஞ்சீவியின் 151 படமாக உருவாகிவரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' என்கிற படத்தில் ராஜகுருவாக முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். சுரேந்தர் ரெட்டி இயக்கிவரும் இந்தப்படத்தில் மேலும் விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதிபாபு, இவர்களுடன் கதாநாயகியாக நயன்தாரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இந்தப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிளை நடித்துக்கொடுத்து விட்டு கிளம்பினார் அமிதாப் பச்சன்..
படத்தில் இடைவேளைக்குப்பின் முக்கியமான மூன்று காட்சிகளில் மட்டுமே அமிதாப் பச்சன் வருகிறாராம்.. ஆனால் காட்சிகளை படமாக்கிய பின் சிரஞ்சீவியும் இயக்குனரும் சேர்ந்து, இன்னும் கொஞ்ச நேரம் அமிதாப் வரும்படி காட்சிகளை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்தார்களாம்..
அதன்படி இடைவேளைக்கு முன்பும் அமிதாப் வருவது காட்சிகளை இணைத்து இந்த விஷயத்தை அமிதாப்பிடமும் கூறி படப்பிடிப்புக்கு வர வேண்டும் என அழைத்தார்களாம். அமிதாப்பும் இந்த புதிய திட்டத்திற்கு சந்தோஷமாக ஒப்புக்கொண்டாராம்.