ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் ஜனவரி 25-ந்தேதி திரைக்கு வந்த படம் பத்மாவத். சஞ்சய்லீலா பஞ்சாலி இயக்கிய இந்த படத்தில் சர்ச்சைக்குரிய விசயங்கள் இருப்பதாக சொல்லி படத்தை வெளியிட வடமாநிலங்களில் பலத்த எதிர்ப்பு, போராட்டங்கள் வெடித்தன. அதனால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் ரிலீஸ் தேதியை மாற்றிக்கொண்டே வந்தனர். பின்னர், நீதிமன்றம் படத்தை வெளியிட அனுமதி அளித்ததை அடுத்து சில வட மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியானது.
மேலும், சர்ச்சைக்குரிய படமாகி விட்டதால் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே திரையிட்ட அனைத்து மாநிலங்களிலும் நல்ல வசூல் இருந்து வந்தது. அந்த வகையில், ஆந்திராவைப் பொறுத்தவரை 2 வாரங்களில் ரூ.20 கோடி வசூலித்துள்ள பத்மாவத் படம் தொடர்ந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியில் அமீர்கான் நடித்து ஆந்திராவில் வெளியான டங்கல் படம் 2 வாரங்களில் ரூ. 21.12 கோடி வசூலித்தது.
தற்போதைய நிலவரப்படி டங்கலை விட பத்மாவத் படத்தின் வசூல் குறைவாக இருந்தபோதும், பத்மாவத் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த வாரத்தில் டங்கல் வசூலை முறியடித்து சாதனை செய்து விடும் என்கிறார்கள்.