பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பாலிவுட்டில் நிச்சயம் துல்கர் சல்மானுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.. சமீப நாட்களாக துல்கர் சல்மானை பற்றிய செய்திகள் பாலிவுட்டில் சுழன்றடித்து வருகின்றன. பாலிவுட்டில் தனது முதல் என்ட்ரியான 'கர்வான்' படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துவிட்டார் துல்கர்.
அடுத்ததாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் 'மேன்மர்ஷியான்' படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார் என அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஆனாலும் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவு திறப்பது போல அபிஷேக் சர்மா என்பவர் இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக 'ராஞ்சனா' புகழ் சொனார் கபூர் நடிக்கிறார்.
கிரிக்கெட் பின்னணியில் அனுஜா சௌகான் என்பவர் 2008ல் எழுதிய 'தி சோயா பேக்டர்' என்கிற நாவலை தழுவி இந்தப்படம் உருவாக இருக்கிறது. இதில் கிரிக்கெட் கேப்டனாக துல்கர் சல்மான் நடிக்கிறாராம்.