ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தங்கல் படத்தில் அமீர்கான் மகளாவும், குத்துச் சண்டை வீராங்கணையாகவும் நடித்தவர் சாயிரா வாசிம். கடந்த 9ம் தேதி சாயிரா, காஷ்மீரிலிருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றபோது பின் சீட்டில் இருந்த ஒருவரால் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதனை வீடியோவாக தனது முகநூலில் வெளியிட்டு வேதனையையும் வெளிப்படுத்தியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தற்போது சாயிராவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மும்பையை சேர்ந்த விகாஸ் சச்தேவ் என்பவர். 39 வயதான அவர் விளம்பரத் துறையில் தொழிலதிபாராக இருக்கிறார். அவரை மும்பை சாஹர் போலீசார் கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால் தன் கணவர் கண்ணியமானவர் என்றும். யதேச்சதையாக கால், கை பட்டதை விளம்பரத்துக்காக சாயிரா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்டும் கூட அவர் இதை செய்திருக்கிறார் என்று விகாஸின் மனைவி கூறியுள்ளார்.