ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள படம் பத்மாவதி. இது முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி, மற்றும் சித்தூர் மகாராணி பத்மாவதி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட வரலாற்றுப் படம். இந்தப் படத்தில் பத்மாவதி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜபுத்திர சமூகத்தினர் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தீபிகா தலையை வெட்டுவோம், உயிரோடு கொளுத்துவோம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள இப்படத்தில் நடித்திருக்கும் சாகித் கபூர் கூறியதாவது... இது மிகவும் வெட்ககேடான செயல். எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. இது தேவையற்ற ஒன்று. எந்த அமைப்பை பற்றியும் நான் கருத்து கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.