அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சமீபத்தில் செய்யதியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட நடன ஆசிரியரும் இயக்குனருமான ரெமோ டிசவுசா, ஏபிசிடி.,ன் மூன்றாம் பாகத்தில் பிரபுதேவா நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளார்.
அவர் கூறுகையில், பிரபுதேவா இல்லாமல் ஏபிசிடி படத்தின் பாகங்கள் எடுப்பது என்பது சாத்தியமில்லாதது. அதனால் ஏபிசிடி 3ம் பாகத்தில் பிரபுதேவா கண்டிப்பாக நடிப்பார். ஏபிசிடி.,யின் முதல் இரண்டு பாகங்களின் கதைகள் பிரபுதேவாவை மனதில் வைத்தே எழுதப்பட்டது. இதே போன்று தான் 3ம் பாகமும் இருக்கும் என்றார். ரெமோ டிசவுசா தற்போது, ஏபிசிடி 3 ம் பாகத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார்.
அத்துடன் சல்மான் கானை வைத்து இயக்கும் பெயரிடப்படாத படத்திற்கான கதையையும் தயாரித்து வருகிறார். இதுவும் நடனம் தொடர்பான படம் என்பது குறிப்பிடத்தக்கது.