சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இந்திய வரலாற்றில் மராட்டிய மாமன்னரான சிவாஜி பற்றி பலரும் பள்ளிக் கூடங்களில் படித்திருப்பார்கள். வட இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிலும் மராத்தியைப் பொறுத்தவரையில் சிவாஜி அந்த மாநிலத்தின் தனிப் பெரும் அடையாளம். அவருடைய வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வந்தார். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிக் கொண்டே போனது. தற்போது 250 கோடி ரூபாய் செலவில் அவரே தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
மாராட்டிய மாநில முன்னாள் முதல்வரான விலாஸ்ராவ் தேஷ்முக்-கின் மகன்தான் ரித்தேஷ் தேஷ்முக். தமிழில் சச்சின், சென்னைக் காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த ஜெனிலியாவின் காதல் கணவர்.
பாகுபலி 2 படம் தந்த மாபெரும் வெற்றியும், வசூலும் பல சரித்திரக் கதைகளை எடுக்க தூண்டுகோலாகி வருகிறது. ஏற்கெனவே, மலையாளத்தில் 1000 கோடி செலவில் ரண்டமூழம், தெலுங்கு, ஹிந்தியில் 500 கோடி செலவில் ராமாயணம், தமிழில் 300 கோடி ரூபாய் செலவில் சங்கமித்ரா எடுக்கப் போவதாக அறிவிப்புகள் வந்துள்ளன. இப்போது அந்த வரிசையில் சத்ரபதி சிவாஜி படமும் சேர்ந்துள்ளது. இந்தப் படத்தை மராத்தி மற்றும் ஹிந்தியில் எடுக்க உள்ளதாகத் தகவல்.
இப்படம் மூலம் தங்கள் குடும்பத்தினரின் அரசியல் ஈடுபாட்டிற்கும் ஆதரவு அதிகரிக்கும் என ரித்தேஷ் தேஷ்முக் நினைக்கிறாராம்.