ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி-2' படம் வெளியாந சில நாட்களிலேயே பாகிஸ்தான் ரசிகர்களிடமும் அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் அந்தப்படத்தை பாகிஸ்தானிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பாகிஸ்தானில் இருந்து நிறைய ரசிகர்கள் 'பாகுபலி-2'வை இந்தியில் வெளியிட்ட பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்... ஆனால் இதற்கு முன்பு சில பாலிவுட் படங்களை பாகிஸ்தானில் திரையிட எதிர்ப்பு கிளம்பியதால், இந்தியில் 'பாகுபலி-2'வை ரிலீஸ் செய்த கரண் ஜோகர், இந்தப்படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் பண்ணுவது குறித்து ஆர்வம் காட்டாமல் இருந்தார்..
இந்நிலையில் பாகிஸ்தானில் 'பாகுபலி-2' ரிலீஸாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இந்தியாவை போலவே பாகிஸ்தானிலும் 'பாகுபலி-2'வை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் க்யூ வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி செல்வதை ஒரு பாகிஸ்தான் ரசிகர் படம் பிடித்து போட்டுள்ளார். குறிப்பாக லாகூர், கராச்சி ஆகிய பகுதிகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம் 'பாகுபலி-2'.