ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. தற்போது சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கும் ஷில்பா, தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து ஈவெண்ட் மானேஜ்மென்ட் நிறுவனம் நடத்துகிறார். இதன் மூலம் நட்சத்திர இரவு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை தொழில் அதிபர் ரவி பஹடோல்யா என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார். அவர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பெட்ஷீட்களை தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் மூலம் விற்றுத் தருவதாக கூறி 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெட்ஷீட்களை வாங்கினார்கள். நிகழ்ச்சிகளில் அதை விற்கவும் செய்தனர். ஆனால் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் எங்களுக்கு 24 லட்சத்தை செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்ற புகார் மனுவில் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டி மீதும், அவரது கணவர் மீதும் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.