ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா, தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மொழிவாரியான படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா, சிக்கிம்-ல் படம் தயாரிக்க இருக்கிறார். இதுகுறித்து பிரியங்கா கூறியிருப்பதாவது... "சிக்கிம்மில் படம் எடுப்பது தொடர்பாக அம்மாநில அரசோடு பேசியிருக்கிறேன், நான் எடுக்க உள்ள படத்தில் சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் நடிகர்களை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். விரைவில் இந்தப்படம் ஆரம்பமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா, தற்போது பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் 2-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது.