ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின், பிரபல இயக்குநர்களில் ஆனந்த் எல்.ராயும் ஒருவர். இவரின் அடுத்தப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பது அனைவரும் அறிந்த செய்தி தான். ஹீரோயின் மட்டும் முடிவாகமல் இருந்த நிலையில், இப்போது யார் நடிக்க போகிறார் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளாக இருக்கும் தீபிகா, கத்ரீனா இருவரும் இப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தன் படத்தில் நடிப்பது தொடர்பாக இயக்குநர் ஆனந்த், நிறைய நடிகைகளிடம் பேசியதாகவும், இறுதியாக தீபிகா மற்றும் கத்ரீனாவிடம் பேசி நடிக்க சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இருவருக்குமே முக்கியமான சமமான ரோல் அளிக்கப்பட்டுள்ளதாம். இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில் ஷாரூக்கான், இதுவரை தான் நடித்திராத ஒரு வித்தியமான ரோலான குள்ள மனிதராக நடிக்க உள்ளார்.