வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் அபிஷேக் பச்சனும் ஒருவர். சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் கூடைப்பந்து வீரரான சாத்னாம் சிங் பமாரா, தன்னுடைய வாழ்க்கை வரலாறு படமானால் அதில் தனது ரோலில் அபிஷேக் பச்சன் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தனது டுவிட்டர் மூலம் நேற்று பதில் அளித்தார் அபிஷேக். அதில், "சாத்னாம் சிங் பமாரா ரோலில் நான் நடித்தால் அது எனக்கு கிடைத்த பெருமையாக நினைப்பேன். ஆனால் ஒரு நிபந்தனை, படத்தில் நான் நடிக்க வேண்டும் என்றால் சாத்னாம் என்பிஏ., போட்டியில் சாம்பியன் பட்டம் பெற வேண்டும். அப்படி அவர் பட்டம் வென்றால் நான் சம்பளம் எதுவும் வாங்காமல் நடிக்கிறேன். என்னுடைய சம்பள தொகையை ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கலாம்'' என்று கூறியிருக்கிறார்.