ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1984ம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா, தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்தது. பலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து 31 அக்டோபர் என்ற இந்திப் படம் தயாராகி உள்ளது. சோஹா அலிகான், வீர்தாஸ், நடித்துள்ள இந்தப் படத்தை சிவாஜி லோதன் பட்டேல் இயக்கி உள்ளார். ஹரி சச்தேவா தயாரித்துள்ளார்.
படம் தணிக்கை குழுவினரின் கெடுபிடிக்குள் பல மாதங்களாக சிக்கி தவித்து வந்தது. இந்த நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அஜெய் கட்டாரா என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ரோகினி, மற்றும் நீதிபதி சங்கீதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான அஜெட் கட்டாரா "இந்தப் படம் நிகழ்கால தலைவரின் சாயலை கொண்ட ஒருவர் வன்முறையை தூண்டுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. முடிந்த பிரச்னையை மீண்டும் தூண்டுவதாக உள்ளது" என்றார்.
தணிக்கை குழுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தணிக்கைக்கு வந்தது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்படி தயாரிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அவரும் அந்த காட்சிகளை நீக்கினார். அதன் பிறகும் படத்தை பார்த்து. படத்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அக்டோபர் 21ந் தேதி படத்தை வெளியிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையடுத்து மனுதாரர் கட்டாராவின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மனுதாரர் கட்டாரா தணிக்கை குழுவை எதிர்மனுதாராக கொண்ட புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். என்றாலும் படம் 21ந் தேதி வெளிவருவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.