ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிக் படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், தற்போது டிஷ்யூம் படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்தப்படியாக கைவசம் சில படங்கள் வைத்திருக்கிறார். இந்நிலையில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான டான் படங்களின் வரிசையில் விரைவில் 'டான்-3' உருவாக இருக்கிறது. இதில் முதல் இரண்டு பாகங்களில் நடித்த ப்ரியங்கா சோப்ரா, மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை. அதனால் அந்த ரோலில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க இருப்பதாக செய்தி வந்தது. ஆனால் இதனை ஜாக்குலின் மறுத்துள்ளார்.
இது குறித்து ஜாக்குலின் பெர்ணான்டஸ் கூறியிருப்பதாவது... ''இப்போது தான் மும்பைக்கு வந்தேன். வந்ததுடன் நான் 'டான்-3'யில் நடிப்பதாக செய்தி கேள்விப்பட்டேன். எங்கிருந்து இது போன்று செய்தி கிளம்புகிறது என்று தெரியவில்லை. டான் படம் தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை, இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.