ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சரப்ஜித். பாகிஸ்தான் சிறையில் நீண்டகாலம் சித்தரவதைப்பட்டு அங்கு நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் வெளிவந்தது. இதில் சரப்ஜித்தாக ரன்தீப்பும், அவரின் சகோதரியான தல்பீர் ரோலில் ஐஸ்வர்யாவும் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை குவிக்கவில்லை.
இதுப்பற்றி ஐஸ்வர்யா ராய் கூறியிருப்பதாவது... ''ஒரு படத்தின் வசூலை மையமாக வைத்து நான் படம் பண்ணுவது கிடையாது. பாக்ஸ் ஆபிஸில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. சரப்ஜித் படம் வெளிவந்த பிறகு பலரும் என்னை பாராட்டினார்கள். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த பாராட்டை என்னை இன்னும் வலிமைப்படுத்துகிறது. இது மிகவும் சென்சிட்டிவான படம், ரசிகர்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு வலு சேர்க்கும் என்று கூறியுள்ளார்.