சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள சிங் இஸ் பிலிங் படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றுள்ளது. இது வரை 68 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்த படம், தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த படத்தின் வெற்றி, படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி யார்தியை சிங் இஸ் பிலிங் படத்தின் அடுத்த பாகத்தை தயாரிப்பது பற்றி சிந்திக்க வைத்துள்ளது.
இது பற்றி அஸ்வினி யார்தி கூறுகையில், சிங் இஸ் பிலிங் படத்தில் ரப்தார் சிங்கின் கேரக்டர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் தொடர்ச்சியை எடுக்க நினைத்துள்ளேன். இதற்காக நல்ல கதை மற்றும் கேரக்டர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கி உள்ளோம் என்றார். ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள சிங் இஸ் பிலிங் படத்தில் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன், கே கே மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். பிரபுதேவா இயக்கியிருந்தார்.